19 November 2010

பெருமானார் [ஸல்] வரலாறு

                                                                       

அஸ்ஸலாமு அழைக்கும்!

நபி [ஸல்] பிறப்பு             :   20-4-570.திங்கக்கிழமை ரபீ உல் அவ்வல்
                                           மாதம் பிறை :12.

பிறந்த இடம்                    :    புனித மக்கா.

பெற்றோர்                        :  அப்துல்லாஹ்[ரலி]
                                          அன்னை ஆமினா[ரலி]

பாட்டனார்                       :   அப்துல் முத்தலிப் 

செவிலித்தாய்                  :   துவையா[ரலி] என்ற அடிமை பெண்,
                                           பின் ஹலிமா[ரலி]அவர்கள்.

பட்டப்பெயர்கள்               :   அல் அமீன்[நம்பிக்கைக்கு உரியவர்]
                                          அஸ்ஸாதிக் [உண்மையானவர்]

முதல் திருமணம்             :   அன்னை கதிஜா[ரலி]அவர்களுடன்
 
மஹர் தொகை                 :   500 திரஹம்கள்.

திருமணத்தை நடத்தி 
                   வைத்தவர்     :   அபூதாலிப் அவர்கள் 


நபி பட்டம் கிடைத்தது       :   40 வயதில் [கி.பி.610]

முதல் வஹீ                     :   இக்ர பிஸ்மி ரப்பிக என்ற வசனம்

மதினாவிற்கு ஹிஜ்ரத்       :   நபித்துவ 12 ம்   ஆண்டில் 

தொழுகைக்கு  பாங்கு 
அறிமுகப்படுத்தப்பட்டது     : ஹிஜ்ரி 2 ல்


மது ஹராமாக்கப்பட்டது     :  ஹிஜ்ரி 6 ல்


மக்கா படையெடுப்பு           :  ஹிஜ்ரி 6 ல்


ஹஜ் கடமை                    :   ஹிஜ்ரி 9 ல் 

நபி{ஸல்}அவர்கள் 
        ஹஜ்  செய்தது         :  ஹிஜ்ரி 10 ல்


உலகைப் பிரிந்த நாள்       :  ஹிஜ்ரி 10,ரபிஉல் அவ்வல் பிறை 12,
                                          திங்ககிழமை [8-6-632 ] 


நாம்  அனைவரும்  அலலாஹ்வையும், நபி வழியையும்  பின் பற்றி    நடப்போமாக!  ஆமீன்.                                          

16 November 2010

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் !

அஸ்ஸலாமு அழைக்கும்[வரஹ்]
                                                                                               அன்பான சகோதர, சகோதரி அனைவருக்கும்,
  என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
                                                
                                                                 அன்புடன்
                                                                     ஆயிஷா

15 November 2010

குர்பானி -விளக்கம்

அஸ்ஸலாமு அழைக்கும்!

இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை இறையச்சமாகும்.
நாம் செய்கின்ற நற்காரியங்களில் இறையச்சம் இருந்தால்தான்  அல்லாஹ்விடம் நற்கூலியை பெறமுடியும்.இந்த முக்கியமான அம்சத்தை நினைவூட்டும் விதமாக திகழ்வது குர்பானியாகும்.

நபி இப்ராஹீம்[அலை]அவர்களின் மகன் இஸ்மாயில்[அலை]அவர்களை 
பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்[அலை]அவர்களுக்கு
கட்டளையிட்டான்.அதை நிறை வேற்றிட தன் மகனை அழைத்து பலியிட 
துணிந்தபோது அல்லாஹ் அதை தடுத்து ஒரு ஆட்டைப் பலியிடுமாறு
கட்டளையிட்டான்.

இந்த தியாகத்தை நினைவுகூரும் மற்ற அனைவரும் பிராணியை குர்பானி 
கொடுக்க வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான்.இந்த விவரங்களை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது[37:101-108]
குர்பானியின் நோக்கம் இறையச்சம் மட்டுமேயாகும்.குர்பானியின் மாமிசமோ,அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை.உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது.[22:37]
உமது  இறைவனை தொழுது குர்பானி கொடுபீராக :[108:2]

உயர்ந்த நோக்கத்திற்காக கடமையாக்கப்பட்ட இந்த குர்பானியை நபி[ஸல்]
தமது வாழ்நாளில் பேணுதலுடன் கொடுத்து வந்துள்ளார்கள்.

எனவே உண்மையான நோக்கத்தை புரிந்துகொண்டு பெருமையோ,வேறு 
காரணங்களோ இல்லாமல் தியாக மனப்பான்மையுடன் அல்லாஹ்வுக்காக 
குர்பானி கொடுக்க வேண்டும்.நாம் மனத்தூமையுடன் செய்கின்ற குர்பானியும் நற்காரியங்களும் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும் மகத்தான நற்கூலியை தரும்.

எவர்களிடம் அன்றைய செலவு போக கடன் இல்லாமல் கூடுதலாக பணம் 
இருக்கிறதோ அவர்களெல்லாம் குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானி கொடுக்க எண்ணியவர்கள் துல்ஹஜ் பிறை ஒன்று முதல் குர்பானி 
கொடுக்கும்வரை நகம் முடியை வெட்டகூடாது.
நபி[ஸல்]அவர்கள் ஆடு,மாடு,ஒட்டகம் ஆகியவற்றை குர்பானி கொடுத்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.எனவே இம்மூன்று பிராணிகளும் குர்பானிக்கு தகுதியானதாகும்.

குர்பானி பிராணிகள் நல்லதிடகாத்திரமானதாகவும்,ஆரோக்கியமானதாகவும் 
இருக்கவேண்டும்.பொதுவாக எந்த குறையும் இருக்க கூடாது.
குர்பானி பிராணிகளை வாங்கும்போது நல்ல தரமான உயர் ரகமானதை 
வாங்குவது நன்மையை அதிகரித்திடும்.
நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும்,ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும்குர்பானிகொடுத்தோம்என்றுஜாபர்[ரலி]அறிவிக்கிறார்கள்[முஸ்லிம்]
நபி[ஸல்]அவர்கள் 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'என்று கூறி கூர்மையான கத்தியால் அறுத்துள்ளார்கள்[புகாரி]
பெருமையை விரும்பாமல் ஏழைகளின் தேவைகளை கருதி எத்தனை பிராணிகளை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம்.வீண் விரயமாகாமல் இருக்கவேண்டும்.

பங்கிடுதலைப் பொறுத்தவரை யாருக்கு எத்தனை சதவிகிதம் என்றெல்லாம் 
கட்டளையிடப்படவில்லை.தர்மம் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.குர்பானியின் பிராணியின் தோலையும் ஏழைகளுக்கு தர்மமாக வழங்கிடுமாறு நபி[ஸல்] கூறுகிறார்கள்[புகாரி,முஸ்லிம்]

குர்பானி கொடுத்ததும்  'யா அல்லாஹ்'   எனது இந்த குர்பானியை ஏற்றுக் 
கொள்வாயாக! என்று  துஆ செய்யலாம்.

அல்லாஹ்நம்அனைவருக்குமகுர்பானிகொடுக்கும்தகுதியையும், ஆவலையும்  தந்து அதை முறையுடன் நிறைவேற்றி அதன் பயனையும்.நன்மையையும் இறை திருப்தியையும் அடைந்து கொள்ளும் வாய்ப்பை தந்தருள்வானாக!ஆமீன்.                                                                                                                                                                                                 

12 November 2010

சலாம் கூறுவதின் சிறப்பு

சலாம் கூறுவதின் சிறப்பும்,அதன் பரப்புவதன் அவசியமும்,

இறை விசுவாசிகளே! உங்களின் வீடுகள் அல்லாத{மற்றவர்}வீடுகளில்,
நீங்கள் உள்ளே நுழைய அனுமதி பெற்று,அவர்களுக்கு நீங்கள் சலாம்
கூறும்வரை உள்ளே நுழையாதீர்கள்.{24:27}

நீங்கள் வீடுகளில் நுழைந்தால்,அல்லாஹ்விடமிருந்துள்ள வாழ்த்தாகவும்,
தூய்மையான அபிவிருத்தியாகவும் உள்ள சலாமை உங்களிடையே
கூறிக்கொள்ளுங்கள்[24:61]

ஒரு மனிதர் நபி[ஸல்]அவர்களிடம்"இஸ்லாத்தில் சிறந்தது எது?"என்று கேட்டார்.பசித்தவனுக்கு நீர் உணவளிப்பது,நீர் அறிந்தவர்,அறியாதவர் என அனைவருக்கும்சலாம் கூறுவது"என்று நபி[ஸல்] பதில் கூறினார்கள்.{புகாரி:12.முஸ்லிம்:39}

அல்லாஹ் ஆதம்[அலை]அவர்களைப் படைத்த போது[அவரிடம்]"நீர் சென்று அங்கேஉட்காந்திருக்கின்ற வானவர்களுக்கு சலாம் கூறுவீராக! உமக்கு அவர்கள் கூறும்வாழ்த்துக்களை நீர் கேட்பீர்ராக! நிச்சயமாக அது உமக்குரிய வாழ்த்துகளாகும்.உம வாரிசுகளுக்குரியே வாழ்த்துக்களாகும்."
அஸ்ஸலாமு அழைக்கும்{உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாவதாக}
என ஆதம்{அலை}வானவர்களிடம் கூறினார்.உடனே அவர்கள் 
அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மதுல்லாஹி[உங்கள் மீதும் அல்லாவின் சாந்தியும்,அவனின் கருணையும் உண்டாவதாக}என்று கூறினார்கள்.[புகாரி:3326.முஸ்லிம் :2841]

மனிதர்களே!சலாம் கூறுவதை பரப்புங்கள்.பசித்தவனுக்கு உணவளிங்கள்.
உறவினர்களை ஆதரிங்கள்.மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் 
தொழுங்கள்.சலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று 
நபி{ஸல்}அவர்கள் கூறினார்கள்.

அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொன்னால் பத்து  நன்மைகள்,
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்றால் இருபது நன்மைகள்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி,வபராகாதுகு என்று சொன்னால் என்று கூறினால் 30 நன்மைகள்.

முஹ்மீனுக்கு  முஹ்மீன் வலைப்பூவில் உங்கள் கருத்தை பகிரும் போது முதலில் சலாத்தை கூறுங்கள்.நாம் சலாத்தை கூறி அதன் பயனை 
பெறுவோமாக!