அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
புனித ரமலான் முழுவதும் பகல் பொழுதில் நோன்பிருந்து, இறுதி நோன்பை முடித்து, அதற்கடுத்த தினம் ஈகைப் பெருநாளை கொண்டாடி மகிழ்கிறோம். பத்தாடை அணிந்து, நறுமணம் பூசி,சுவையான உணவுகளை உண்டு கழிக்கிறோம். அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகிறோம். இவ்வாறு மகிழ்வுடன் இருக்கும் போது நம் கண்ணெதிரில், நம் பக்கத்து வீட்டில்,அடுத்த தெருவில் நம்மைச் சுற்றி எத்தனையோ ஏழைகள்-சகோதர,சகோதரிகள் நம்மைப் போன்றே நோன்பு நோற்று விட்டு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாமல் வாடிக் கொண்டிருப்பார்கள். இந்நிலை ஏற்படாமல் வசதி படைத்தவர்களைப் போன்றே எல்லாமக்களும் மனங்குளிர உணவருந்த வேண்டும் என்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட திட்டம் தான் ஃபித்ரா எனும் பெருநாள் தர்மம் ஆகும்.
முஸ்லிமான ஆண்,பெண்,சிறியவர்,பெரியவர்,பணியாட்கள் அனைவருக்காகவும் பெருநாள் தர்மத்தை நபி {ஸல்} கடமையாக்கினார்கள் என்று இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
உணவு பொருட்களாகவோ,பணமாகவோ ஃபித்ராவை வழங்கலாம்.
பெருநாளைக்கு சில தினங்கள் முன்பாகவே இதனை வழங்குதல் சிறப்பாகும் நபித் தோழர்கள் ஃபித்ராவை பெருநாளைக்கு சில நாட்கள் முன்பாகவே கொடுத்து வந்தனர் என்று இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஃபித்ராவை கொடுத்துவிடுமாறு நபி{ஸல் அவர்கள் கூறியதை,இன்றைய மக்கள் பெருனாளன்று காலையில் ஏழைகளைத் தேடுமளவு ஆக்கி கொண்டார்கள்.
ஃபித்ரா தரமானதாகவும் பிறர் உண்ணும் வகையிலும் இருக்க வேண்டும்.
ஒருவர் மட்டகரமான பேரிச்சம்பழத்தை கொண்டு வந்தார். அதை நபியவர்கள் பெற்று கொள்ளாமல், அதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் என்று தடுத்து விட்டார்கள். இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
நபித்தோழர்கள் காலத்தில் இருகைகளால் உணவு பொருகளைப் வாரி வழங்கி அதனை ஒரு ஸாவு என கண்கிட்டார்கள்.
இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்.
இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க வேண்டும்.
ஃபித்ரா நோக்கத்தையும், அதன் சுன்னத்தான முறையையும் நாம் உணர்ந்து, ஏழை முஸ்லீம்களையும் சந்தோஷமாக பெருநாள் கொண்டாட வகை செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் ....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...
அனைவருக்கும் ஈத் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
உங்கள் சகோதரி
ஆயிஷா அபுல் .
புனித ரமலான் மாதமும் நம்மை கடந்து செல்கிறது. பிரிய மனமின்றி ஏக்கத்துடன் விடை கொடுப்போம்.எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!
21 comments:
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ...
சகோ.ஆயிஷா அபுல்,
சரியான நேரத்தில் அருமையான இடுகை சகோ. மிக்க நன்றி.
//ஃபித்ரா நோக்கத்தையும், அதன் சுன்னத்தான முறையையும் நாம் உணர்ந்து, ஏழை முஸ்லீம்களையும் சந்தோஷமாக பெருநாள் கொண்டாட வகை செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் ....//
---அட..! இதையேத்தான் நானும் வேறு மாதிரி இன்றைக்கு சொல்லி இருக்கேன் சகோ...!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
அருமையான பகிர்வுக்கு நன்றி.
பெருநாள் வாழ்த்துக்கள்.
தமிழ் மானம் ஓட்டும் போட்டாச்சு.
அருமையான விளக்கங்கள் ஆயிஷா மச்சி.. எங்களுடைய இனிய பெருநாள் வாழ்த்துகள்
ரமலான் வாழ்த்துக்கள்
//~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ...
வ அழைக்கும் சலாம் வரஹ் ...
//சரியான நேரத்தில் அருமையான இடுகை சகோ. மிக்க நன்றி.//
உங்கள் முதல் வருகைக்கும்.கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.
//---அட..! இதையேத்தான் நானும் வேறு மாதிரி இன்றைக்கு சொல்லி இருக்கேன் சகோ...!//
ஆமாம் சகோ.படித்து கமெண்ட் போட்டு விட்டேன்.
அல்ஹம்துலில்லாஹ் ...
//அந்நியன் 2 சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
அருமையான பகிர்வுக்கு நன்றி.
பெருநாள் வாழ்த்துக்கள்.
தமிழ் மானம் ஓட்டும் போட்டாச்சு.//
வ அழைக்கும் சலாம் சகோ.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ.
உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.ஓட்டு போட்டதற்கு நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
நல்லதொரு நினைவூட்டல்...அல்ஹம்துலில்லாஹ்...
ஜசாக்கல்லாஹு க்ஹைர்...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…
அருமையான விளக்கங்கள் ஆயிஷா மச்சி.. எங்களுடைய இனிய பெருநாள் வாழ்த்துகள்//
அஸ்ஸலாமு அழைக்கும்
வாங்க,வாங்க நீண்ட நாட்களுக்குப்பின் கமெண்ட்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கொழுந்தன்.உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
மாமா எப்படி இருக்காங்க? பெருநாளைக்கு போன் பண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ்..
//Speed Master சொன்னது…
ரமலான் வாழ்த்துக்கள்//
வருகைக்கு நன்றி சகோ.
//Aashiq Ahamed சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
நல்லதொரு நினைவூட்டல்...அல்ஹம்துலில்லாஹ்...
ஜசாக்கல்லாஹு க்ஹைர்...//
வ அழைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
வஇய்யாக்கும்....
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இனிய நோன்பு பெருநாள் வாழ்த்த்துக்கள்.
பகிர்வு அருமை.
வ அழைக்கும் சலாம்
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும் ஆயிஷா!
பெருநாள் நல்வாழ்த்துக்கள் தோழி! தாமதமாக சொன்னாலும் தவறாமல் சொல்லிவிட்டேன் :) நல்ல பதிவு.
//பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஃபித்ராவை கொடுத்துவிடுமாறு நபி{ஸல் அவர்கள் கூறியதை,இன்றைய மக்கள் பெருனாளன்று காலையில் ஏழைகளைத் தேடுமளவு ஆக்கி கொன்றார்கள்//
'ஆக்கிக் கொண்டார்கள்' என்று வரவேண்டியதல்லவா இது? பெருநாள் வேலையின் அவசரத்தில் எழுத்துப் பிழையாகிவிட்டதோ? :) மாற்றிவிடுங்கள் தோழி.
வ அலைக்கும் சலாம் அஸ்மா
//பெருநாள் நல்வாழ்த்துக்கள் தோழி! தாமதமாக சொன்னாலும் தவறாமல் சொல்லிவிட்டேன் :) நல்ல பதிவு.//
வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.
'///ஆக்கிக் கொண்டார்கள்' என்று வரவேண்டியதல்லவா இது? பெருநாள் வேலையின் அவசரத்தில் எழுத்துப் பிழையாகிவிட்டதோ? :) மாற்றிவிடுங்கள் தோழி.///
மாற்றி விட்டேன் தோழி.உதவிக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர்...
அஸ்ஸலாமு அலைக்கும்
ஃபித்ரா பற்றிய தங்களின் பதிவு அருமை,ஜஜாக்குமுல்லாஹ்
zumaras சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்
ஃபித்ரா பற்றிய தங்களின் பதிவு அருமை,ஜஜாக்குமுல்லாஹ்///
வ அலைக்கும் சலாம்
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
சரியான நேரத்து பதிவு , ஜஸாக்கலாஹ் க்கைர் ஈத் முபாரக் .
((கொஞ்சம் பிசி அதான் லேட் ))
///ஜெய்லானி சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
வ அலைக்கும் சலாம் வரஹ்...
//சரியான நேரத்து பதிவு , ஜஸாக்கலாஹ் க்கைர் ஈத் முபாரக் .//
உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி சகோ.
ஈத் முபாரக்.
((கொஞ்சம் பிசி அதான் லேட் ))
பழைய டைரியல்லாம் பிரட்டிக் கொண்டு ரெம்பவே பிசி.
//பழைய டைரியல்லாம் பிரட்டிக் கொண்டு ரெம்பவே பிசி.//
ஹா..ஹா.. நோன்பு நேரமாக இருந்ததால் அதிகம் வலைபக்கம் வர முடியவில்லை :-)
//ஜெய்லானி சொன்னது…
நன்றி சகோ.
Post a Comment