21 December 2010

பாவமன்னிப்பு {தவ்பா}

அல்லாஹ்வுடைய அடியார்களே சகோதர்களே !சகோதரிகளே !

அஸ்ஸலாமு அலைக்கு {வரஹ்}

நாமெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தொழுகின்ற தொழுகைகள்,நோன்பு,
ஜகாத்,ஹஜ் முதலான இபாதத்களின் ஒருமித்த நோக்கம் என்னவென்றால்
பாவமன்னிப்பு தேடுவதும் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதுமாகும்.
நமது இபாதத்களின் வார்த்தைகளை கவனித்து பார்த்தால் இவை நன்றாக
புரியும்.நமது சிறிய பெரிய பாவங்கள் மன்னிக்கப்படவும் தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற குற்றங்குறைகளை அல்லாஹ் மன்னித்து விடவும் கேட்கக்கூடிய தவ்பா எனும் பாவமன்னிப்பு தான் நமது இபாதத்களில்   அடங்கி உள்ளது.

உதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி என்னவென்று சொல்லும்போது அன்று பிறந்த பாலகனைப் போல தூயமையாகித் திரும்புவதாக நபி [ஸல்]அவர்கள் கூறுகிறார்கள்.

பாவமன்னிப்பு என்பது ஒரு முஹ்மீனைப் பொறுத்தவரை மிகமிக முக்கியமான தேவையாக இருக்கிறது.நல்லடியார்கள்,நபிமார்கள் எல்லாம் அதிகமாக பாவமன்னிப்பு தேடி இருக்கிறார்கள்.நபி [ஸல்} அவர்கள் இரவெல்லாம் நின்று இபாதத் செய்கிறார்கள்.கால்களெல்லாம் வீங்குமளவுக்கு நின்று வணக்குகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!உங்களின் முன் பின் பாவங்களை  மன்னித்துவிட்டதாக    அல்லாஹ் வாக்களித்துள்ள பிறகும் இவ்வளவு கடினமான வணக்க வழிபாடுகளில் தாங்கள் ஈடு பட வேண்டுமா என்று ஆயிஷா{ரலி}கேட்ட போது, "ஆயிஷாவே "நான் அல்லாஹ்வுக்கு நன்றயுள்ள அடியானாக ஆக வேண்டாமா என்று நபி{ஸல்}
பதிலளித்தார்கள்.

அல்லாஹுதஆலா  தனது அருள்மறை குர்ஆனில் முஹ்மீன்களின்  முக்கிய பண்புகளைப்பற்றி குறிப்பிடும்போது அவர்கள் பாவமன்னிப்பு தேடுவார்கள் என்று கூறுகிறான்.

மூச்சிறைக்க பாய்ந்து ஓடுகின்ற குதிரைகளை உதாரணம் சொல்லி
தனது உரிமையாளன் விரல் அசைத்ததும் பாய்ந்து சென்று எதிரிகளின் கூட்டத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்தும் குதிரைகளின் நன்றயுள்ள பண்பை ஒப்பிட்டு, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறுகிறான.

மனிதர்கள் தமக்களித்த ஆற்றலையும், திறமையையும்,ஆயுளையும்  தவறான காரியங்களின் பக்கம் அளித்து வருகிறார்கள்.

நாளை மறுமையில் நமது உறுப்புகள் அனைத்தும் சாட்சி சொல்லும் .நாம் 
மனதிற்குள் மறைத்து வைத்த இரகசியங்களும் வெளிப்படுத்தப்படும்.

அந்நாளின் கடுமையை சிந்தித்து, நம் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றி   உள்ள அடியார்களாகவும்,அவனிடம் பாவமன்னிப்பு தேடக்கூடிய 
பண்பாளர்களாகவும்  வாழ்வோமாக!


18 December 2010

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும்.....

                                                                
                                                               
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்]

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

எத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை என்னும் கயிற்றை பற்றி பிடித்திருக்கும் நம்பிக்கையாளர்களை கண்டு வியந்திருப்போம். நம்மையும் இறைவன் அப்படி ஆக்கியருள வேண்டுமென்று  பிரார்த்தனை  செய்திருப்போம். அவர்களுக்கு மத்தியிலே வாழ விருப்பப்பட்டிருப்போம்.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். இவர் கண் மருத்துவத்தில் தனித்துவம் பெற்றவர். பரிணாமவியல் குறித்த என் பதிவுகளுக்காக சில தகவல்களை இவருடைய பேச்சுக்களில் இருந்து நான் சேகரித்ததுண்டு.

இவரும் நாத்திகராக இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர் தான்.

டாக்டர் லாரன்ஸ் ப்ரௌன் (Dr. Lawrence Brown), கனடியன் தாவாஹ் அசோசியேசனின் (Canadian Dawah Association) interfaith துறையின் தலைவர். அமெரிக்க விமானப்படையில் மதிப்புமிக்க கண் மருத்துவராக பணியாற்றியவர். 

1990 ஆம் ஆண்டு இவருடைய வாழ்க்கை திசை திரும்பியது. அது தான் இவர் இறை நம்பிக்கையின்பால் வந்த நேரம். 

"அது 1990 ஆம் ஆண்டு. நான் ஜார்ஜ் வாஷிங்க்டன் பல்கலைகழக மருத்துவமனையில் பணியாற்றிய நேரம். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி என்னுடைய இரண்டாவது மகள் பிறந்தாள்.
 

மார்பிலிருந்து பாதங்கள் வரை அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த அவளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இதய குழாய்களில் இருந்த பிரச்சனையால் அவளுடைய உடம்பால் தேவையான இரத்தத்தை பெற முடியவில்லை. ஒரு மருத்துவராக அவள் அதிக நாட்கள் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருந்தேன். மிகவும் உடைந்து போனேன். இப்போது அவளுக்கு தேவை அவசர அறுவை சிகிச்சை.

குழந்தைகள் இதய சிகிச்சையில் தனித்துவம் பெற்ற மருத்துவர் அழைக்கப்பட்டார். என் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் அவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்து விட்டு வெளியேறினேன்.

இப்போது எனக்கு துணை யாருமில்லை, என்னுடைய பயத்தை தவிர. அது என்னை அந்த மருத்துவமனையின் வழிபாட்டு அறைக்கு செல்லவைத்தது.

பாரம்பரியமிக்க கிருத்துவ குடும்ப பின்னணியை கொண்ட நான், இறைவனை குறைந்த அளவாவது அங்கீகரித்தது என்றால் அது இப்போது தான். அதுகூட சந்தேகத்தில் தான் பிரார்த்தித்தேன்.... 

"இறைவா நீ இருந்தால்..."

அவன் இருந்தால், அவன் என் குழந்தையை காப்பாற்றினால், என்னை அவனுடைய மார்க்கத்திற்கு வழி காட்டினால் நிச்சயம் அவனை நான் பின்பற்றுவேன். இதுதான் அப்போது இறைவனுக்கு நான் அளித்த வாக்குறுதி. பிறகு அவசர சிகிச்சை பிரிவிற்கு திரும்பினேன்.

என் மகள் நலமாகி விடுவாள் என்று மருத்துவர் கூறினார். அவர் சொன்னது போன்றே இரண்டு நாட்களில் அவள் சரியாகி விட்டாள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே.... இன்று அவளுக்கு பதினெட்டு வயது. நலமாக இருக்கிறாள்.

நான் முன்னமே கூறியது போன்று நான் ஒரு மருத்துவர். அவள் குணமானதற்கு மருத்துவ ரீதியாக patent ductus arteriosis, low oxygenation and spontaneous resolution என்று காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிச்சயமாக இதில் இறைவனின் பங்குள்ளது என்றே என் மனம் சொல்ல

பயத்தில் இறைவனிடம் வாக்குறுதி கொடுக்கும் பலரும், அவர்களுடைய தேவை நிறைவேறிய பின்னர் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க புது புது காரணங்களை கண்டுபிடிப்பர்.

என் மகள் குணமடைந்ததற்கு மருத்துவ காரணங்களை காட்டி என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. காரணம், நம்பிக்கை என்னுள் ஆழமாக நுழைந்து விட்டது. நாங்கள் எடுத்த cardiac ultrasounds, ஒருநாள் பிரச்சனை இருப்பதாக காட்டியதையும் மறுநாள் அந்த பிரச்சனை இல்லை என்று காட்டியதையும் என்னால் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

நான் நினைத்ததெல்லாம் இதுதான், இறைவன் நான் கேட்டதை நிறைவேற்றி விட்டான், இப்போது நான் அவனுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
                                                                                                               

12 December 2010

மஸ்ஜிதின் சிறப்பு !

அஸ்ஸலாமு  அழைக்கும்{வரஹ்}


மஸ்ஜித்!
 அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய "ஹய்யாலல் பலா(ஹ்)" என்று அகிலத்தாரை அழைப்பது தான் அல்லாஹ்வின் இல்லங்கள் எனப்படும் மஸ்ஜிதுகளின் தலையாயப் பணி. மஸ்ஜித் என்பன பொதுவாக வணக்கஸ்தலமாக இருந்தாலும் ஸஜ்தா செய்யும் இடம் என்றும் அரபியில் சொல்லபடுகிறது.

மஸ்ஜித் ஒரு வரலாற்று பார்வை
உலகில் முதன்முதலில் கட்டப்பட்ட மஸ்ஜித் 'கஃபதுல்லாஹ்' எனக்குர்ஆன் சான்று பகிர்கிறது.காபா முதலில் ஆதிமனிதரும் முதல் நபியுமாகிய ஆதம் (அலை) அவர்களால் இறையோனை முறையாக வணங்கும் வழிப்பாட்டுதலமாக துவங்கப்பட்டது..,பிறகு நபி இப்ராஹீம்(அலை) அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

அதற்கு பிறகு இரண்டாவதாக,40 வருடங்களுக்கு பின் மஸ்ஜித் அக்ஸா ஆதம் நபி அவர்களால் கட்டப்பட்டது.மூன்றாவதாக இஸ்லாமிய வரலாற்றில் பெருமானார்[ஸல்]அவர்களின் கரங்களால் கட்டப்பட்ட பள்ளி மஸ்ஜித் குபா ஆகும்.இது மதினாவிற்கு அருகில் உள்ளது.
நான்காவதாக மதீனாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி கட்டப்பட்டது, இதற்கு நபியின் பள்ளி என்ற சிறப்பும் உண்டு.இவைகளே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாயில்கள் பின்பு உலகம் முழுவதும் பல்லாயிரம் மஸ்ஜிதுகள் கட்டப்பட்டன.கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மஸ்ஜித் கட்டுவதின் சிறப்பும், பயன்பாடும் 
ஒருவர் இவ்வுலகில் ஒரு மஸ்ஜித் கட்டினால் அல்லாஹ் அவருக்கு 
சுவர்க்கத்தில் மாளிகையை தருவான். (திர்மிதி, ஹாகிம்.) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுகளை கட்டுவதன் சிறப்பை இவ்வாறு கூறுகிறார்கள்

நபிகளார் காலந்தொட்டே மஸ்ஜிதுகள் கடமைக்காக தினம் சென்றும் வரும் ஒரு இடமாக மட்டும் பயன்படுத்தப்படாமல் சமுகரீதியான செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டே வந்தன உதாரணமாக,மக்களை ஒன்று சேர்க்கும் மையங்களாக, சமுதாய ஒற்றுமைகளை பெரிதும் ஏற்படுத்தியும், .ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொள்ளவும், உதவிகள் செய்து கொள்ளவும்,ஒரு களமாக மஸ்ஜிதுகள் பயன்படுத்தப்பட்டன மேலும் மஸ்ஜிதுகள் தொழுகையில் ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இஸ்லாத்தின் உயர்ந்த இலட்சியத்தை இன்றும் உலகறிய செய்கிறது.

எனவே தான் மஸ்ஜிதுகளின் முக்கியத்துவத்தை உணர்த்த நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள்  தனித்து தொழுவதை விட பள்ளிக்கு சென்று கூட்டாக (ஜமாத்துடன் சேர்ந்து) தொழுவதை ஊக்குவித்தார்கள் என்பதைவிட கட்டாயப்படுத்தினார்கள் என்றாலும் மிகையாகாது. தனியாக தொழுதால் ஏற்படும் நன்மையை விட பள்ளியில் ஜமாத்துடன் சேர்ந்து தொழுதால் இருபத்தைந்து மடங்கு நன்மைகள் கூடுதலாக கிடைக்கும் என்று மக்கள் மஸ்ஜிதுகளின் பால் செல்வதற்கு ஆர்வமூட்டினார்கள்.
                                  
அத்தகைய மேன்மை தங்கிய மஸ்ஜிதுக்குள் அல்லாஹ்வை தொழ அன்றாடம் செல்லும் நம்மில் பலர் பள்ளிவாயிலுக்குண்டான துவாவை சொல்ல மறப்பது வருத்தமான விஷயமே., பெருமானார் அவர்கள்
 பள்ளிக்குள் நுழையும்போது ஓதும் துஆ!  வலது காலை முனவைத்து 

அல்லாஹும்ம இப்தஹ்லி அப்வாப ரஹ்மத்திக
  
[பொருள்]இறைவனே உன் பேரருளின் வாயிலை திறந்து வை என்றும். அதுப்போல  பள்ளியை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ!
அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக்க மின் வரஹ்மத்திக
[பொருள்]இறைவனே! நான் உன் அருட் கொடையையும்,கிருபையையும் 
தேடுகிறேன் என்ற சங்கைமிகுந்த துஆவையும் கற்றுக்கொடுத்தார்கள்  

இவ்விடத்தில் முஸ்ஸ்லிம்களாகிய நாம் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும்

"நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18) 
என்ற மறை சொல்லுகிணங்க அல்லாஹ் அல்லாத யாரையும் புகழவோ, பெருமைப்படுத்தவோ மஸ்ஜிதுகளை பயன்படுத்தக்ககூடாது.
மேலும் பள்ளிவாயிலுக்கு தொழ செல்லும் போது சுத்தமான ஆடைகளையே அணிந்து செல்லவும் வேண்டும் ஏனெனில்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;(7:31) 
என்று வல்லோன் அழகிய கட்டளையும் பிறப்பித்திருக்கிறான். 
அவன் கூறிய வழி நின்று அவனை நாளும் வணங்க அருள்புரிவானாக!