25 September 2010

கடன்

அஸ்ஸலாமு  அழைக்கும்!             

     வியாபாரத்தில் கடன் என்பது தவிக்க முடியாத அம்சமாகி விட்டது. எல்லா வியாபரத்திலும் கடன் கொடுக்கல் வாங்கல் இருந்து கொண்டே இருக்கிறது. கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடந்து கொள்ள வேண்டிய முறையை அல்குர்ஆன் தெள்ளத் தெளிவாக சொல்கிறது. 

கடன் கொடுப்போரும் கடன் வாங்குவோரும் நடந்து கொண்டால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் இருக்கும் விஷயங்கள் நேர்மாறானவை. கடன் வாங்கும்போது இனிக்க இனிக்கப்பேசி வாங்கிப் போவார்கள். கடனை திருப்பி கேட்டால் காரமாக பேசுவார்கள். உங்க பணத்தை எடுத்துக்கொண்டு எங்கும் ஓடிப்போய்விட மாட்டேன் தருகிறேன் என்பார்கள். எப்போது என்பதை மட்டும் சொல்ல மாட்டார்கள். வற்புறுத்திக் கேட்டால் ஒரு நாளை சொல்வார்கள். அந்நாளில் போனால் அலைகழிப்பார்கள்.  இவர்களின் எண்ணம் கடன் வாங்கிய பணத்தை அல்லது பொருளை மோசம் செய்து விட வேண்டும் என்பதே. இவர்கள் எதை செய்யப் போனாலும் விரித்தியாவதில்லை. திருப்பி கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு முடியாதபோது அவர்கள் அறியாத விதத்தில் அல்லாஹ் அக்கடனை அடைத்து விடுவான். இதைத்தான் இந்த ஹதீஸும் சொல்கிறது. 

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை பாழாக்கும் நோக்கத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை பாழாக்கி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி

வசதி மிக்கவர்கள் வியாபாரிகளிடம் கடன் வாங்கி வைத்துக்கொண்டு இழுத்தடிப்பார்கள். இப்படி செய்வதை கெளரவமாக நினைப்பவர்களும் உண்டு. இது அநியாயமாகும். வியாபாரம் செய்பவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.

வசதியுள்ளவர் (கடனை) இழுத்தடிப்பது அநியாயமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நூல்: திர்மிதி

வசதி இருந்தும் கடனை அடைப்பதில் அக்கரை காட்டாதவர்களை வேண்டுமென்றே தாமதம் செய்பவர்களை கடுமையான வார்த்தையைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு உரிமையுண்டு.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். 

நபித்தோழர்கள், 'அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்" என்று கூறினார்கள். நூல்: புகாரி
                                               

21 September 2010

நியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி

அஸ்ஸலாமு அழைக்கும்!

மனிதன்  ஒரே  ஒரு  நோக்கத்திற்காகவே   படைக்கப்பட்டுள்ளான்.
"என்னை   வணங்குவதற்காகவே  ஜின்களையும்  மனிதரையும் 
படைத்திருக்கின்றோம் " என்று  அல்லாஹ்  கூறுகிறான் {51:56}
                                                                                                         மனிதர்கள்  இவ்வுலகில்  தன்னைப்படைத்த  இறைவனை   வணங்கி          வாழ வேண்டும். வணக்கத்தில்  மிகச்  சிறந்தது  தொழுகை. தீர்ப்பு 
நாளில்  மனிதன் தான்  இவ்வுலகில்  செய்த  ஒவ்வொரு  செயலுக்கும்
பதில்  அளித்தே  ஆக வேண்டும். இவ்வாழ்கையில்  அவனுக்களிப்பட்ட  
அருட்கொடைகளைப்  பற்றி  அவன் விசாரனை  செய்யப்படுவான்.

பின்னர்  உங்களுக்கு  இறைவன்  புரிந்த  அருளைப்பற்றியும்  அந்நாளில்
நீங்கள்  கேட்கப்படுவீர்கள்.என்று  குர்ஆன  கூறுகிறது  [102:8}. ஆனால் 
கடுமையான  அந்நாளில்  கேட்கப்படும்  முதல்  கேள்வி 
தொழுகையைப்  பற்றியதாகும்.

நியாயத்  தீர்ப்பு   நாளில்  அவனது  செயல்கள்  சாட்சியாக  வைக்கப்படும்போது ,முதல்  நிலையாகிய  தொழுகை  சரியாக  அமைந்திருந்தால்  மறுமையின்  நிலையும்  சரியாக  அமைந்து  விடும் .தொழுகை  சரியாக  அமையாவிட்டால் மறுமையில்  அளவற்ற  கஷ்டங்களை  எதிர்நோக்க  நேரிடும். 

ஒரேயொரு  தொழுகையை  கவனக்  குறைவாக   விட்டாலும் 
அது  ஈடு  செய்ய  முடியாத  ஒரு  பெரும்  பாவமாகும்.

கடுமையான  போர்க்களங்களில்  கூட  ஒரு  முஸ்லீம்  தொழுகையை 
தவறவிட  அனுமதி  இல்லை. மாதவிடாய்  சமயத்தில்  மட்டும் 
{பெண்களுக்கு}  இதிலிருந்து  சலுகை  அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் எவ்வளவு  கடும்  நோய்னால்  பாதிக்கப்பட்டிந்தாலும் ,
அவர்களது  உணர்வுகள்  இருக்கும்வரை  தொழுதே  ஆக வேண்டும்.

நாம்  எல்லோரும்  அல்லாஹ்வை  ஈமான்  கொண்டு,
ஐந்து  நேர  தொழுகையை  கடைபிடிப்போமாக!         

17 September 2010

அல்லாஹ்வின் வல்லமை

                                                                                                அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள்: 

அல்லாஹ் கூறுகிறான்: எனது அடியார்களே! நான் நிச்சயமாக அநீதியை ஹராமாக்கிக் கொண்டேன். மேலும் உங்கள் மீதும் ஹராமாக்கி விட்டேன். எனவே நீங்களும் அநீதி இழைக்காதீர்கள். என் அடியார்களே! நீங்கள் அனைவரும் வழிதவறியவர்கள்தாம். எனினும் நான் நேர்வழியில் நடத்துபவர்களைத் தவிர. ஆகவே நேர்வழியைக் காட்டுமாறு என்னிடம் கேளுங்கள். நான் (உங்களுக்கு) நேர்வழியைக் காட்டுகிறேன்.

என் அடியார்களே! உங்களில் நான் உணவளித்துப் பசியாற்றியர்வர்களைத் தவிர (மற்ற) அனைவரும் பசித்தர்வர்களே. ஆகவே அவர்களுக்கு உணவளிக்குமாறு என்னிடம் கேளுங்கள், நான் உணவளிக்கிறேன். 

 என் அடியார்களே! உங்களில் நான் உடை அணிவித்தவர்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரும் உடையற்றவர்களே. என்னிடம் உடையளிக்குமாறு கேளுங்கள். நான் உங்களுக்கு உடை அணிவிக்கிறேன். என் அடியார்களே! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவ காரியங்களைப் புரிகிறீர்கள்; நான் சகல பாவங்களையும் மன்னிக்கிறேன். ஆகவே என்னிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். நான் உங்களுக்கு மன்னிப்பளிக்கிறேன்.

என் அடியார்களே! எனக்கு நீங்கள் தீங்கிழைக்கவோ, நன்மை புரியவோ முடியாது. என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், உங்களுக்கு பின்னால் தோன்றக் கூடியவர்களும், மனிதர்களூம், ஜின்களும்,  (அனைவரும்) உள்ளத் தூய்மைப் பெற்ற முத்தக்கீன்களாகி (இறையச்சமுடையவர்களாகி) விட்டாலும் அது என் அதிகாரத்தை சிறிதளவும் அதிகப்படுத்தி விடாது. என் அடியார்களே! உங்களுக்கு முன்னால் தோன்றியவர்களும், இனி தோன்றக் கூடியவர்களும், உங்களில் மனிதர்களும், ஜின்களும், (ஒன்று சேர்ந்து) மிகக் கெட்ட மனம் படைத்தவர்களாகி விட்டாலும் அதுவும் என் அதிகாரத்தை சிறிதளவும் குறைத்து விடாது!                 

என் அடியார்களே! உங்களுக்கு முன் தோன்றியவர்களும், பின்னால் தோன்றக்கூடியவர்களும், மனிதர்களும், ஜின்களும் அனைவரும் பூமியில் ஓர் இடத்தில் நின்றுகொண்டு என்னிடம் கேட்கட்டும் . அவர்கள் கேட்கின்ற அனைத்தையும் ஒவ்வொருவருக்கும் நான் கொடுப்பேன். (அவ்வாறு கொடுப்பதால்) கடலில் ஓர் ஊசி முனையை நுழைத்து எடுத்தால் அதி கடல் நீர் ஒட்டிக் கொள்வதால் எவ்வளவு கடல் நீர் குறையுமோ அந்த அளவுக்குக்கூட என்னிடமுள்ள அருட்கொடைகள் குறைந்து விடாது.

என் அடியார்களே! இதோ உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனிக்கிறேன். பிறகு (மறுமையில்) இதன் கூலியை உங்களுக்கு நான் அளிப்பேன். நீங்கள் நற்கூலி பெற்றுக்கொண்டால், அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி காட்டுங்கள்; நல்லது அல்லாததை (தண்டனை) நீங்கள் பெற்றுக் கொண்டால் அதற்கான காரணம் நீங்கள்தாம்.            

12 September 2010

இறைவனுக்கு இணை வைத்தல்

                                      பெரும் பாவம்                                  அஸ்ஸலாமு  அழைக்கும்

நாம்  வாழும் உலகில் எல்லா படைப்புகளையும் வல்ல இறைவன் படைத்து ஒழுங்கு படுத்தி அவைகளை ஒரு வரையறைக்குள் வாழ வைத்து    கொண்டிருக்கிறான்.இதில் சிறந்த படைப்பு மனித இனம் மட்டுமே.             இந்த மனிதனை படைத்தது;அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும்,
ஆற்றல்களையும் வழங்கி சிறப்பித்திருக்கிறான்.

மனிதன் தன்னை மட்டுமே வணங்கி வர வேண்டும். 
தனக்கு நிகராக எந்த படைப்பையும் கொண்டு,
தனக்கு இணை கர்ப்பிக்கக்கூடாது 
என்பது தான் இறைவனின் கண்டிப்பான 
கட்டளை !                            
     
"திக்ர்" எனும் தியானம் 'துஆ' எனும் பிரார்த்தனை 'ஸஜ்தா' என்ற 
சிரம்பணிதல்,மற்றநேர்ச்சை, குர்பானி,வணக்க வழிபாடுகள் யாவும் எல்லாம் வல்ல ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே.
                                            
இந்த வணக்கத்தை இறைவனின் படைப்புகளுக்கு செலுத்தி 
கவுரவப்படுத்திடும் போது  இவைகளை எல்லாம் படைத்த இறைவன் மிகவும் ரோஷம் கொள்கிறான்.கோபப்படுகிறான்.தன்னை மனிதன் மதிப்பதில்லை.
தான் படைத்த படைப்புகளை தன்னைவிட மதித்து வழிபடுகிறானே என்று 
ஆக்ரோஷம் கொள்கிறான்.அகிலங்களின் புகழுக்கெல்லாம்  இறைவன் மட்டுமே சொந்தக்காரன்.அத்தகைய புகழை பிறருக்கு தாரை வார்த்து வருவதை கண்டிக்கிறான். அவர்களை தண்டிக்கிறான்.
                                                                                                              நிச்சயமாக இறைவன் தனக்குஇணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். மேலும் இது அல்லாததை {குற்றங்களை}த்தான், நாடியவர்களுக்கு  மன்னிப்பான்,மேலும் யார் இறைவனுக்கு இனைவைப்பாரோ,அவர் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டார் {அல்குர்ஆன 4:116}
                                                                                                               சமாதி {கப்ர்}வணக்க வழிபாட்டினை  ஆதரித்து அடக்கஸ்            தலங்களுக்கு{தர்காக்களுக்கு] சென்று  வழிபட்டு  வருபவர்களே!
கப்ர் எனும் சமாதிகளை வணங்க இஸ்லாம் தடுத்துள்ளேதே."உங்களின்  செருப்பு வார் அறுந்தாலும் இறைவனிடமே  கேளுங்கள்!"என்று இறைத்தூதர் 
முஹம்மத்{ஸல்}அவர்கள் கூறியிருக்க {கப்ர்]சமாதிகளில்  சென்று  மண்டியிட்டு  மன்றாடுவது எந்த வகையில் எந்த வகையில் நியாயம்?
                                                                                                     இனியேனும் இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் இப்பாவச் செயலை விட்டு தவிர்த்திடுவீர் !    
                                                                                                                          சமாதி[கப்ர்]களை தரிசனம்{ஜியாரத்} செய்பவர்கள் மீது இறைவனின் சாபம் இறங்குகிறது.இறைத்தூதர்{ஸல்}அவர்கள்கூறுகிறார்கள்.அடக்கஸ்தலங்களை வணக்கஸ்த்தளங்களாக ஆக்கி விடாதீர்கள்.
                                                                                                              இறைவா என் சமாதி{கப்ர்}யை வணங்கும் இடமாக ஆக்கி விடாதே என்று இறுதி இறைதூதர் இறைவனிடம் இறைஞ்சியதை  ஒரு வினாடி எண்ணிப்பார்க்க வேண்டாமா?
                                                                                                      இறைவனுக்கு இணைவைத்திடும் இக்கொடிய பாவத்தைவிட்டு 
விலகி;ஐந்து நேரம் தொழுகையை முறையாக கடைப்பிடித்து;
நம்மைப்படைத்த இறைவனிடமே கையேந்தி பிரார்த்திப்போமாக!!!
                                                                                                          இறைவன் கூறுகிறான் :நீங்கள் பிரார்த்திப்பீராக ! உன்னையே 
நாங்கள் வணங்குகிறோம் .இன்னும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.{அல்பாத்திஹா அத்தியாயம் 1-வசனம்:


 நாம்  அல்லாஹுவின்  மீது நப்பிக்கை கொண்டு, அவனுக்கு 
இணை வைக்காமல்  நடப்போமாக!

09 September 2010

ஈத்  முபாரக்!
                       அஸ்ஸலாமு  அழைக்கும்!                இஸ்லாமிய  சகோதர,சகோதரிகள் அனைவருக்கும்  என் இனிய  பெருநாள்  வாழ்த்துக்கள்.